என்டிபிபி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 60 தொகுகிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் நாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.