நர்சரி பண்ணைக்கு விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம் – புதுக்கோட்டை விதை ஆய்வுதுணை  இயக்குநர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில், நர்சரி பண்ணை வைத்திருப்பவர்கள் விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம் என புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அறந்தாங்கி,ஆவுடையார்கோவில், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில்  தென்னங்கன்றுகள், காய்கறி நாற்றுகள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் நர்சரி உரிமையாளர்கள், கட்டாயம் விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை    மாவட்டத்தில், விண்ணப்பித்த 6 நாற்றுப்பண்ணை உரிமையாளர்களுக்கு விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ன் கீழ் 5 ஆண்டுகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தென்னங்கன்றுகள், நாற்றுகள் மற்றும் விதை கொள்முதல் விபரங்களை, விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு, நாற்றுகளை விற்பனை செய்யும்போது, பயிர், ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விபரங்களுடன் விவசாயிகளின் கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும்.

தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்ள

புதிய லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப்பம்

சமர்ப்பித்து, விதை கட்டுப்பாடு ஆணை, 1983 கீழ் புதிய லைசென்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − 25 =