தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாத பதிலுரையில் இன்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று, முயற்சிகள மேற்கொள்ளப்படும். இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு
Similar Articles
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக வேகத்தடை அமைக்க போக்குவரத்து தொழிலாளர்கள் வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் அரசு போக்குவரத்து பணிமனை நீண்ட காலமாக இயங்கி வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை முன்பாக அரசு வேகத்தடை அமைத்துக் கொடுத்திருக்கிறது ஆனால் அறந்தாங்கி பனிமனை முன்பாக வேகத்தடை இல்லை. இதனால்அந்தப் பணிமனையில் வேலை செய்த அரசு ஊழியர் இளமுருகன் என்பவர் பனிமலையில் வேலை செய்துவிட்டு வெளியே வரும்பொழுது விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் இறந்துள்ளார்.
அதேபோல பல ஊழியர்கள் அடிபட்டு கைகால் முறிந்து வேலை செய்ய முடியாமல் விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அடிக்கடி பணிமனை முன்பாக விபத்து நடக்கின்ற காரணத்தினால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தினம் தோறும் இரவு பகலாக வேலை செய்துவிட்டு வெளியே வரும் பொழுதும், உள்ளே செல்லும் பொழுதும் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி இறப்பதும் உடல் உறுப்புகள் சேதம் அடைவதும் தொடர்கதையாக இருந்து வருவதாக பணிமனை ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஊழியர்களின் போக்குவரத்து துறை ...
தென்கொரியாவில் நடந்த தடகள போட்டிகளில் அசத்திய டாக்டர் விஜயா
ஜியோன்புக் என்று அழைக்கப்படும் ஆசியா பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் இரண்டாவது பதிப்பு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
2023ம்ஆண்டிற்கான இந்த போட்டி கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் 20 தாம்...