திருச்சி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதி 6 பேர் பலி

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி கார் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலத்தில் இருந்து கும்பகோணம் கோயிலுக்கு 9 பேர் காரில் சென்ற நிலையில் 6 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − = 43