தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தெற்கு மாவட்ட திமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தலைமையில் நகர திமுக அலுவலகத்தில் இருந்து 200 மேற்பட்டோர், ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மீதும் தமிழர்களின் கொள்கையின் மீதும் புரிந்து கொண்டு தமிழக ஆளுநர் ரவி தமிழ் தான் சிறந்த மொழி என்று பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.