தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களை புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனரும் ஆசிரியருமான சு.சிவசக்திவேல் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து 2023 ஆம் ஆண்டிற்கான மாதாந்திர காலண்டரை வழங்கி அமைச்சர் அவர்கள் எடுத்து வைக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்தி புதுகை வரலாறு வால் கிளாக் பரிசளித்து, புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியும் அவற்றை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தார்.

