தமிழகம் : ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் – இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அத்துடன் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. மேலும் திரையரங்க ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

முன்னதாக கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 44 = 49

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: