தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,07,206 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,07,206 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,816 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,54,323 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,814 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 175 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,43,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,15,28,272 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,60,306 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18,069 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.