கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடிய போது, தமிழக காவல் துறையினர் அவர்களை சுட்டுப் பிடித்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விசாரணையின் போது தப்பிச் செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக காவல் துறையினர் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச் சூட்டின் போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு காவல்துறையினர் அவர்களை காலில் குறிவைத்து சுட்டு பிடிக்கிறார்கள்.
இந்த நிலையில், கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.