
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார், இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், கேடயம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பெரியதுரை, மதிமாரிமுத்து சேர்மதுரை நகரச் செயலாளர் பிரகாஷ் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, மாரிசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ் மாரியப்பன், அஜய்மகேஷ்குமார் வீரமணி பிரகாஷ் வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், ஏற்பாடுகளை காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.