
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் அவசர அனுமதிக்காக தற்போதுவரை 5 தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில இடங்களில் இரண்டு தடுப்பூசிகளும் மாற்றிபோடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இதனைத்தொடர்ந்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.