கேரளாவில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 16 = 25