குழந்தைகளை 6 வயதில் தான் 1-ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1-ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. 6 வயது முடிந்த பிறகு 1-ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 3 வயதில் பிரி – பிரைமரி வகுப்பில் சேர்க்கலாம். 3 ஆண்டுகள் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.