தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நல மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது, திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு சிறுபான்மை இன மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்: கோவில் பூசாரிகள், உலமாக்களுக்கு நலவாரியம் உள்ளது போல் கிறிஸ்தவ தேவாலய உபதேசியார் களுக்கு நலவாரியம் அமைக்கவும், மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் உள்ளது போல் சிறுபான்மையினர் நல வாரிய அலுவலர் நியமிக்கப்படவும், வன்னியர் கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் கிடைத்திட நடவடிக்கைஎடு க்கவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போராடி பெற்றுத் தந்து தற்சமயம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்தது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தகோரியும் ,1991ல் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த தடை ஆணையை நீக்கி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மானியத்துடன் கூடிய ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் எனவும்,சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை புதிதாக கட்டுவதற்கும் பழமையான ஆலயங்களை மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கான தடைகளை நீக்கி 90 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய பெருமக்களுக்கு மாவட்டந்தோறும் சுமார் ஐந்து ஏக்கரில் மயான கல்லறை அமைத்துதரவும், பல வருடங்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய தோழர்களை, மற்ற சிறைக் கைதிகளுக்கு வழங்கும் கருணையை அவர்கள் மீதும் காட்டி விடுதலை செய்ய வேண்டும் எனவும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும் : சட்டசபையில் இனிகோ இருதயராஜ் கோரிக்கை
Similar Articles
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக வேகத்தடை அமைக்க போக்குவரத்து தொழிலாளர்கள் வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் அரசு போக்குவரத்து பணிமனை நீண்ட காலமாக இயங்கி வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை முன்பாக அரசு வேகத்தடை அமைத்துக் கொடுத்திருக்கிறது ஆனால் அறந்தாங்கி பனிமனை முன்பாக வேகத்தடை இல்லை. இதனால்அந்தப் பணிமனையில் வேலை செய்த அரசு ஊழியர் இளமுருகன் என்பவர் பனிமலையில் வேலை செய்துவிட்டு வெளியே வரும்பொழுது விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் இறந்துள்ளார்.
அதேபோல பல ஊழியர்கள் அடிபட்டு கைகால் முறிந்து வேலை செய்ய முடியாமல் விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அடிக்கடி பணிமனை முன்பாக விபத்து நடக்கின்ற காரணத்தினால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தினம் தோறும் இரவு பகலாக வேலை செய்துவிட்டு வெளியே வரும் பொழுதும், உள்ளே செல்லும் பொழுதும் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி இறப்பதும் உடல் உறுப்புகள் சேதம் அடைவதும் தொடர்கதையாக இருந்து வருவதாக பணிமனை ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஊழியர்களின் போக்குவரத்து துறை ...
தென்கொரியாவில் நடந்த தடகள போட்டிகளில் அசத்திய டாக்டர் விஜயா
ஜியோன்புக் என்று அழைக்கப்படும் ஆசியா பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் இரண்டாவது பதிப்பு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
2023ம்ஆண்டிற்கான இந்த போட்டி கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் 20 தாம்...