கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து ஆந்திராவுக்கு பணிக்கு சென்ற டிராக்டர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் எர்ரஹள்ளி அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த தருமபுரியைச் சேர்ந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் சவலூரை சேர்ந்த முத்து(20), மல்லி(60), முனுசாமி(50), வசந்தி(45), 3 மாத குழந்தை வர்ஷினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − 83 =