காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யக் கோரி புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மத்திய சங்கத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார்., கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் எம்.தரணிமுத்துக்குமார், எஸ்.சாமியய்யா, பெல்லாராம், செந்தில்நாதன், பாலமுருகன், டி.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர், ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும், 8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்கும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: