
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட 1076 நீள முள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன்நீட சுற்றுச்சூழல் அமைப்பு மூன்று அமைப்புகளுடன் இணைந்து புதுக்கோட்டையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை மற்றும் மணமேல்குடி சீனியர் அன்பறிவகம் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் , அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடமேற்கொள்கிறது.

ஒரு கோடி பனை விதை நடவுப்பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 24 ம் தேதி காலையில் சென்னையில் தொடங்கி வைக்கிறார். கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை 43 கி.மீ. தூர கடற்கரையில் 4 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட உள்ளது. அதற்கான கையேடு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலரின் கடித நகல் ஆகியவற்றை பனை வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், கீரின் நீடாபசுமைஅமைப்பு , ராஜவேலு வழிகாட்டுதலின் புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சிரம்யா ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து புன்னகை அறக்கட்டளை நிறுவனர் அமரடக்கியைச் சேர்ந்த ஆ.சே.கலைபிரபு வழங்கினார். கையேட்டை பெற்றுக் கொண்டார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஒரு கோடி பனை விதை நடவுத் திட்டத்திற்கு தேவையான முழு ஒத்துழைப்பும், வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.