ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வும், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வும், ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக அபய் குமார் சிங்-க்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 8