உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்களை கவுரபடுத்தும் நிகழ்வு

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பாக உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களை மரியாதை செய்து கவுரபடுத்தும் நிகழ்வு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

வாழ்விற்கு பிறகும் வாழ்க்கை எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி தலைமை வகித்தார். டீன் டாக்டர் குமரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா,சுகாதாரதுறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களை மரியாதை செலுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கி கவுரபடுத்தினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களின் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + = 10