புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி இவர் வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை காணவில்லை என இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு மாதமாக இலுப்பூர் காவல் நிலைய பகுதிக்குள் பல்வேறு ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு புகார்கள் வந்து கொண்டிருந்தது. கடந்த வாரம் மேலப்பட்டியை சேர்ந்த மூர்த்தி அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருடர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மேலப்பட்டியில் ஆடுகளை திருடியது தொடர்பாக இலுப்பூர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த சாமியப்பன் மகன் மோகன்ராஜ் (20), மேலப்பட்டியை சேர்ந்த காளிமுத்து மகன் கார்மேகம் (25), சாலைப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் பிரேம்குமார் (21) , மெய்யக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நல்லுசாமி மகன் பிரபாகரன் (21), ஆகியோர்கள் என தெரியவந்தது இதனையடுத்து 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 ஆடுகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் ஆடு திருட்டு வழக்கில் கைது செய்ப்பட்ட இளைஞர்கள் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.


