இந்தியாவில் மேலும் 37,593பேருக்கு கொரோனா பாதிப்பு, 648 பேர் பலி

இந்தியாவில் மேலும் 37,593பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது, இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,12,366 ஆக உயர்ந்துள்ளது

நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதிதாக 37,593 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,12,366 ஆக உயர்ந்தது. புதிதாக 648 பேர் இறந்துள்ளனர்.இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,35,758 ஆக உயர்ந்தது.தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,169 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,22,327 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம் 97.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.99% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 59,55,04,593 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 19 = 27