இந்தியாவில் கொரோனாவால் மேலும் 41,965 பேர் பாதிப்பு, 460 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.38 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதிதாக 41,965 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,28,10,845 ஆக உயர்ந்தது. புதிதாக 460 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,020  ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 33,964 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,93,644 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,78,181 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம் 97.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13% ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2