இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  31ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. இன்று புதிதாக 30,948 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 403 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 38 ஆயிரத்து 487 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து  36 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 398 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 58 கோடியே 14 இலட்சத்து 89 ஆயிரத்து 377 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − 79 =