
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் செந்துறை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவசங்கர் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா (அரியலூர்), கண்ணன் (ஜெயங்கொண்டம்) அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2022-2023ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற செந்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 116 மாணவர்களுக்கும், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 68 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 96 மாணவ, மாணவியர்களுக்கும், தளவாய் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 38 மாணவர்கள், 35 மாணவிகள் என மொத்தம் 73 மாணவ, மாணவியர்களுக்கும், முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 08 மாணவர்கள், 12 மாணவிகள் என மொத்தம் 20 மாணவ, மாணவியர்களுக்கும், குறிச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 33 மாணவர்கள், 14 மாணவிகள் என மொத்தம் 47 மாணவ, மாணவியர்களுக்கும், குழுமூர் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 92 மாணவர்கள், 82 மாணவிகள் என மொத்தம் 174 மாணவ, மாணவியர்களுக்கும் என ஆக மொத்தம் 355 மாணவர்களுக்கும், 171 மாணவிகளுக்கும் என 526 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று, இன்றையதினம் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 195 மாணவிகளுக்கும், பரணம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 41 மாணவர்கள், 43 மாணவிகள் என மொத்தம் 84 மாணவ, மாணவியர்களுக்கும், இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 34 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 51 மாணவ, மாணவியர்களுக்கும், ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 26 மாணவர்கள், 21 மாணவிகள் என மொத்தம் 47 மாணவ, மாணவியர்களுக்கும் என ஆக மொத்தம் 101 மாணவர்களுக்கும், 276 மாணவிகளுக்கும் என 377 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் 903 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,621 மாணவர்கள், 3,157 மாணவியர்கள் என மொத்தம் 5,778 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்களுக்கு அவர்கள் கல்லூரி செல்லும்போது மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், படித்த இளைஞர்கள் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் நான் முதல்வன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு கற்றல் உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி, சுகாதாரம் தமிழகத்தின் இரு கண்கள் என குறிப்பிட்டதைப் போல மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் பெற்றோர்களுக்கு இணையாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கர்மவீரர் காமராஜர் அவர்கள் தமிழகத்தில் அதிக பள்ளிகளை திறந்தது போல முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் அதிகளவிலான கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களை நிறுவி சாதனை படைத்துள்ளார்கள். இதன் பயனாக தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு தற்பொழுது இலக்கு நிர்ணயித்துள்ளது ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான தேர்வுப் பெற்ற முதல் பத்து இடங்களில் நமது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி அன்னபூரணி 7ஆம் இடத்தையும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் புகழேந்தி 8ஆம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்கள். எனவே, தமிழக அரசின் இதுபோன்ற கற்றல் உபகரணங்களை மாணவ, மாணவியர் முறையாக பயன்படுத்தி கல்விகற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவதுடன் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா, செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், பள்ளி தலைமையாசிரியர்கள் செல்வ விநாயகம், ஆதிரை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.