ஆவுடையார்கோயில் அருகே சித்திரவிடங்கம் ஸ்ரீ விசாலாட்சி ஸ்மேத காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே சித்திரவிடங்கம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி முனீஸ்வரர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் மற்றும் பரிகார மூர்த்திகள் திருக்கோவில் அமைந்துள்ளது, இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. இதற்கென சிறப்பான யாகசாலை அமைத்து வெள்ளிக்கிழமை முதற்கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது,விழாவின் முக்கிய நாளான இன்று முன்றாம்காலயாக பூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது, கடம் புறப்பாடானது மேளதாளங்களுடன் கோவிலை சுற்றி வலம்வந்தபின் கோபுர கலசத்தை அடைந்தது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, சித்திரவிடங்கம் கிராமத்தார்கள், கிராம மிராசுதாரர்கள் மற்றும் தேவா இளைஞர் நற்பணி மன்றம் சுற்றுவட்டார ஆன்மீக மெய்யன்பர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கோபுர தரிசனம் செய்தனர், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.