ஆலங்குடி அருகே சேவுகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேர் காயம் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே  சேவுகம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 616 காளைகளும்,240 மாடுபிடி வீரர்களும்  கலந்து கொண்டனா். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்றி வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில்  இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினா். சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த காயமடைந்த 5பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 16