ஆப்கானிஸ்தான் விவகாரம் : அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க ஆக.26ல் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிற நாட்டினர் அங்கு வசிக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கு விளக்குவதற்காக ஆக.26ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி பிரல்ஹாத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஜோஷி பிரல்ஹாத் இது தொடர்பான கூடுதல் விரங்களை விரைவில் வெளியிடுவார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4