அம்பேத்கர் 133-வது  பிறந்த நாள் விழா- திமுக சார்பில் அன்னதானம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது நகர்மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகரச் செயலாளர் டேனியல்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானொர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 1