அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் இன்று காலை 6.27 மணியளவில், 4.3 ரிக்டர் அளவிளான நிலநடுக்கும் உருவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணியளவில் அடுத்தடுத்து முறையே ரிக்டரில் 4.6, 6.1 மற்றும் 5.9 அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இத்தகைய சூழலில் காலை முதல் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.